கனமழை & வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு வழங்கவும், ரேஷன் கடைகளுக்கு முன் தண்ணீர் தேங்கி இருந்தால், உடனே அகற்றவும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.