4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், ஏ.வ வேலு, ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோரை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.