ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 19 செம்பரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட செல்வது தொடர்கதை ஆகிவிட்டது.

இதனை தடுப்பதற்கு ஆந்திர போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து செம்மரங்களை பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் இதையெல்லாம் மீறி செம்மரம் கடத்தல் சம்பவங்களில் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது செம்மரம் வெட்ட சென்ற 25 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.