கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட 38 சதவீத வாக்குகளை பெற்று 33 இடங்களை கைப்பற்றிய பாஜக வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 350 க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. பாஜக தன்னுடைய கோட்டையாக இருக்கும் இடங்களை தவிர சோனியா காந்தி மற்றும் அகிலேஷ் யாதவியின் மனைவி டிம்பிள் யாதவ், சரத் பவர் மற்றும் மூத்த தலைவர்கள் வைத்திருக்கும் பல நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த முறை கவனம் செலுத்துகின்றது.

அதனைப் போலவே 2019 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட முடியாத தென்னிந்திய மாநிலங்களிலும் வெற்றி பெற பாஜக தற்போது திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதும் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.