கோவை மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்ட DMK கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி 3 நாட்களாக நகராட்சி கட்டடத்தில் ADMK கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ADMK கவுன்சிலர்களுக்கு ஆதரவாக, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற செல்வராஜ். அருண்குமார் உள்ளிட்ட 2 அதிமுக MLAக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.