கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வரும் நவ. 25ம் தேதி முதல், தகுதியானவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என அறிவித்துள்ளது.