சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையேயான மோதலில் 18 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கன்கெர் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர மோதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களிடம் இருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.