விருதுநகரில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை போர் மேன் சுரேஷ் குமாரை அதிகாலையில் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் உள்ளிட்டோரை வலைவீசி தேடி வருகின்றனர். விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.