கட்சியிலும், அனுபவத்தில் சின்னவனாக இருப்பதால் கட்சியினர் தன்னை சின்னவர் என்று அழைப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் 1500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், இந்த இயக்கத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மனிதர்களுக்கு விருது அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த எம்எல்ஏ, அமைச்சர் பதவி ஒருநாள் வரும், போகும். பட்டப்பெயர்களில் எனக்கு உடன்பாடு கிடையாது ஆனால், நான் உங்கள் வீட்டு பிள்ளை என்பது மட்டும் எப்போதும் தொடரும் என்றார்.