தமிழகத்தில் இளம் வயதிலேயே பெண்கள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருமண வயதை அடையும் முன்னரே ஏற்படும் தவறான பழக்கத்தின் காரணமாக இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் கருத்தரிப்பு சம்பவங்கள் அதிகரிக்கிறது.

இந்த விவகாரத்தில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ள நிலையில், பள்ளிக் காலத்திலேயே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.