புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே பிப்ரவரி 18ஆம் தேதி இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல் மற்றும் கடற்கரைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.