தற்போது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பள்ளியின் தாளாளர் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவரை  பாலியல் சீண்டல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து இது குறித்து அந்த மாணவன் பள்ளி முடிந்தவுடன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு பள்ளியின் தாளாளரை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.