விஜயகாந்த் நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து, அவரது தொண்டர்கள், ரசிகர்கள் பலரும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், எங்க தலைவருக்கு ஒன்றும் ஆகாது; அவர் இன்னும் 100 வருடம் ஆரோக்கியமாக இருப்பார் என ஆனந்த கண்ணீர் விடும் அவர்கள், இனிமேல் கேப்டன் குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.