டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மற்றொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியான் சிங் என்ற 63 வயது விவசாயிக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.