இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பிரதான் மந்திரி உஜ்வாலா  என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ்  பல கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தகுதியான மக்களுக்கு ரூ.200 மானியத்தில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் (ரூ.2400) வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மானியத்தை பெறுவதற்கு KYC கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். வரும் மார்ச் 31ம் தேதிக்குள் KYC பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் மானியம் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் அலுவலகம் (அ) ஆன்லைனில் KYC பூர்த்தி செய்யலாம்.