தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு இனி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாமக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.