தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை , நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது குடை மற்றும் ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.