மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கொரோனா தொற்று இருப்பதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று காலை அறிக்கையின் மூலம் தெரிவித்த நிலையில் சற்று முன் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட உடனே அவரது உடல் சாலிகிராமம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.