தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சு திணறல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கை மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.