தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தாலும் மகளிர் உரிமைத்தொகை வழங்க எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில், குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1000 வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொருவருக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இன்று மாலைக்குள் அனைவருக்கும் வந்துவிடும். ஆனால், மேல்முறையீடு செய்தவர்களுக்கு ₹1000 வராது. அவர்களுக்கு அடுத்த மாத தவணையில் தான் வழங்கப்படும்.