ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 14ஆவது பெட்டி தடம் புரண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயிலை மீட்க ரயில்வே ஊழியர்கள் போராடி வருகின்றனர்.