தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர் நலனுக்கான நலம் நாடி செயலியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்து வைத்தார். அதனைப் போலவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.