கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் முன்பே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக, கிலோவுக்கு ரூ.34 என ரூ.170 பணமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.