நில மதிப்பீட்டை குறைத்துக் காட்டி பத்திரப் பதிவு செய்யப்படுவதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது.  இதில் 270 சார் பதிவாளர் அலுவலகங்கள் கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் 3000 கோடி மதிப்பிலான பதிவுகளுக்கு கணக்கு காட்டப்படவில்லை என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சோதனை தொடர்ந்து நடப்பதால் தொகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது