சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவி தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காது என அறிவிக்கப்பட்டது. அதனை சரிகட்டும் வகையில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் மாத உதவி தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.