தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக வட்ட அளவில் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி உடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை அணுகி மீண்டும் விண்ணப்பிக்கலாம். ஆயிரம் ரூபாய்க்கு யார் யாருக்கு  தேவை இருக்கிறதோ அவர்களுக்கு தரப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.