இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜசேகரன் (81) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 2006இல் ஆலங்குடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானவர். சிறுவயது முதல் பொதுவுடமை சித்தாந்தம் மீது பற்றுக்கொண்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றிக் கண்டவர். குறிப்பாக தமிழகமே திரும்ப பார்த்த நெடுவாசல் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் இவர்தான். இவரது உடல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.