மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவுத் திட்டத்தின் செலவினத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மைய சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்ட செலவின தொகையை உயர்த்த ஆணையிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகள் மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்பட்டு வரும் உணவூட்டுச் செலவின தொகையினை உயர்த்தி வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மைய சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கு உணவூட்டு செலவினம் பயனாளி ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 2.39 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தி வழங்கப்பட்ட செலவினப்படி, தினசரி காய்கறிகளுக்கான செலவினம் ருபாய் 1.33 எனவும், உப்பு உள்ளிட்ட தாளித பொருட்களுக்கான செலவினம் ரூபாய் 0.46 எனவும் எரிபொருளுக்கான செலவினம் ரூபாய் 0.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உணவு ஊட்டுச் செலவினம் உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 4114 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும். இதன் மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களில் உள்ள சத்துணவு திட்ட பயனாளிகளான சுமார் 11.50 லட்சம் குழந்தைகள் பயனடைவார்கள்.

உணவூட்டுச் செலவினம் தற்போது வழங்கப்பட்டு வருவது மற்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ள விவரங்கள் கீழ்காணும் அட்டவணையில் கண்டுள்ளவாறு :