இந்தியா முழுவதும் 7 நாட்களில் சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் சி.ஏ.ஏ. சட்டம் எதிரானது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜகவின் நாசகாரச் செயல்களை திமுக அனுமதிக்காது. உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் #CAA-ஐ கால்வைக்க விடமாட்டோம் என்று சூளுரைத்துள்ளார்.