செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் வெளியாகியிருக்கிறது. அதில்,”அமைச்சர்களை நீக்கவும், சேர்க்கவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதிமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டின்போது நீங்கள் இப்படி கூறவில்லை. இதன்மூலம் உங்கள் இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது” என்று முதல்வர் ஆளுநரை சாடியுள்ளார்