மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மீட்பு நிவாரண பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்..

மழை பாதிப்பு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்எல்ஏக்களிடம் தொலைபேசியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அலுவலக எக்ஸ் பக்கத்தில், மாண்புமிகு முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின் அவர்கள் முகாம் அலுவலகத்திலிருந்து மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா.எழிலன், திரு. இ.கருணாநிதி, திரு. இ.பரந்தாமன், திரு. எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் திரு.வி.க.நகர் கண்காணிப்பு அலுவலர் திரு. கணேசன், இ.ஆ.ப., ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்ததோடு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.