வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் மாநகராட்சி ஆணையர்,  மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி துணை மேயர் ஆகியோரும்   முக்கிய அதிகாரிகளும் பங்கேற்று இருக்கிறார்கள்.

தொடர்ந்து நேற்று முதல் பெய்து வருகின்ற மழை இப்போது கொஞ்சம் தணிந்துள்ள நிலையில்  அடுத்த கட்டமாக என்னென்ன மாதிரியான வேலைகளில் ஈடுபடலாம் ? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான நிவாரணம், வெள்ளை நீரை எப்படி அப்புறப்படுத்துவது ? முக்கிய சாலைகள் தேங்கி இருக்கும் வெள்ள நீரை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் ? உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த ஆலோசனை ஈடுபட்டு வருகிறார்கள்.