மாநிலம் முழுவதும் ஆக.15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.15 காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி கூட்டத்தை நடத்தவும் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.