கருவூல ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் இம்ரான் கான் எம்பி பதவியை இழக்கிறார். மேலும், அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதால், அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்பதால் அந்நாட்டு அரசியலில் புயல் கிளம்பியுள்ளது.