தெலங்கானா அருகே மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி, அங்கு பட்டம் பறக்க விடும் விழா நடந்து வந்தது. இந்நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரரின் கழுத்தில் பட்டத்தில் பறக்கவிடும் மாஞ்சா நூல் அறுத்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தொடர்ந்து, பட்டம் பறக்கவிட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.