நாமக்கல், சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, பைக்கில் திரும்பியபோது நடந்த விபத்தில் டேவிட், சரவணன் சம்பவ இடத்திலும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட +2 மாணவன் கெளதம் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மோகன்குமார், பூவரசன் ஆகியோர் உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்