புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், நேற்று சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி வழங்க முடியாது என மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.