மழை எதிரொலியாக டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, மழையின்போது மாணவர்க வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது