தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ஜனவரி 10ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொங்கல் பண்டிகையை குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.