தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை இரண்டாம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிபிஎஸ்இ,மாநில கல்வி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.