தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பணி நாள் என்பதால் அனைவருக்கும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.