மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் மைக் சின்னம் அவரை பாடாய்படுத்தி வருகிறது. கன்னியாகுமரியில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டபோது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் சீமான் டென்ஷன் ஆகியுள்ளார்.

முன்னதாக சென்னையில் மைக் சின்னம் குறித்து பிரஸ்மீட்டில் சீமான் பேசிக்கொண்டிருந்தபோது, ரத்தக்கொதிப்பு.. ரத்தக்கொதிப்பு என்ற ரிங்டோன் ஒலித்தது. இதனால் கோவமடைந்த சீமான் சிறிது நேரம் தனது பேச்சை நிறுத்தினார்.