தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்ராஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.