சென்னை மாநகராட்சியின் வாயிலாக 393 அம்மா உணவகங்கள் இப்போது செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவை இயங்கி வருவதால் அங்கு உள்ள பொருட்கள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகிறது.

இதனால் அம்மா உணவகத்தில் பழுதடைந்த பொருட்களை ஆய்வு மேற்கொள்ள குழு ஒன்று நியமிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இன்னும் இரண்டு வாரத்தில் புதிய பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யவும் பழுதடைந்த அம்மா உணவகங்களை சரி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.