“விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை” என்று விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று இணையவழியில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் இதனை உறுதிபடுத்தினார். “சிலர் போலியான சூழலை ஏற்படுத்தி பணம் பெற முயல்கிறார்கள். இதற்கு ஐயா பழ.நெடுமாறனை பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள் என்று தயா மோகன் வேதனை தெரிவித்தார்.