தமிழகத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிப்ரவரி 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு திமுக அரசின் சாதனை மற்றும் மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.