பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கையாக இருக்கும் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் சூர்யாவை கைது செய்ததை அறிந்த பாஜகவினர் காவல் ஆணைய அலுவலகம் முன்பு குவிந்தனர். அவர்கள் திடீரென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான நிலை உருவானது. இவரின் கைது நடவடிக்கை பாஜகவின் பரபரப்பை கிளப்பியுள்ளது.