கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ஹெப்பல் தொழில் பூங்கா அமைந்துள்ளது. இந்த தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர தீ விபத்தினால் 50-க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் பொதுமக்கள் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் இது பயங்கர தீபத்தின் காரணமாக 2 கிலோமீட்டர் அளவுக்கு புகை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.