தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை தென்மேற்கு வங்க கடலில் புயலாக மாறும். பின்னர் டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. நேற்று சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.