விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். மிகவும் புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மற்றொரு நாள் பணி நாளாக இருக்கும் எனவும் பணி நாள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.